புதுவை-கடலூரை புரட்டிப் போட்ட தாணே புயல்

“தாணே புயல்” தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஒருகை பார்த்து விட்டது. இயற்கையின் சீற்றத்தின் முன் மனித முயற்சிகள் நிற்கமுடியாது, எடுபடாது என்பதற்கு தாணே புயல் சீற்றத்தைக் குறிப்பிடலாம்.

உயரே எழுந்து சீறிப் பாய்ந்து வந்து தாக்கிய கடலலைகள். சுழற்றியடித்த சூறாவளிக் காற்றுடன் தொடர் மழையும் சேர்ந்து கொண்டு மக்களை பெரும் துயரத்தில் தள்ளியது. கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா வீரர்கள் இந்திய அணியை சுருட்டிப் போட்டதைப் போன்று தாணே புயல் கடலூர் புதுச்சேரியை சுருட்டிப் போட்டுவிட்டது.

அடித்த சூறாவளிக் காற்றில் லட்சக்கணக்கான மரங்கள் பெயர்த்து எறியப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மின்கம்பங்கள் பலகோணத்தில் வளைந்து நெளிந்து விழுந்து கிடந்தன. மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு அனைத்துப் பகுதிகளும் இருளில் மூழ்கிப் போயின.
பி.எஸ்.என்.எல். நிறுவன மின்னணு கோபுரங்கள் ஆங்காங்கு நொறுங்கிப் போய்க் கிடந்தன. தனியார் அலைபேசி நிறுவங்கள் நிறுவியிருந்த மின்னணு கோபுரங்கள் எங்கு பறந்து சென்றன என்று தெரியவில்லை. அதனால் அலைபேசிகள் அனைத்தும் செயலிழந்தன. விடுமுறை நாளானதால் வழக்கம் போல் அரசு அதிகாரிகள் எவரும் இந்தப் புயலின் தாக்கத்தைப் பற்றி கவலைப்படவில்லை.
ஏற்கனவே பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் சேமிப்புக் குட்டைகள் தோன்றியிருந்தது. சாலைகளில் பயணம் செய்தவர்கள் அனைவரும் அரசை வசைபாடி வாழ்த்திக் கொண்டுதான் வாகனங்களில் சென்று வந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் தானே புயல் மழையால் சாலைகளில் வாகனப் போக்குவரத்தைப் பார்க்க முடியவில்லை.

வெள்ளக்காடாக புதுச்சேரி
இம்மாதிரியான புயல் மழையைப் பார்த்து நீண்ட நாட்களாகிவிட்டதால் மக்களும் எந்த முன்னேற்பாடு எதுவும் செய்து கொள்ளாமல் இருந்து விட்டனர். வெள்ளி சனி ஆகிய நாட்களில் பெய்த பெருமழையால் கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் வசித்து வருகின்ற மக்கள் பெரும் பாதிப்பிற்கு ஆளாகினர். குடியிருப்புகளில் மழை நீர் மற்றும் சில இடங்களில் கடல்நீர் புகுந்ததால் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செலவேண்டியதாயிற்று.
மின்சாரம் இல்லை போக்குவரத்து இல்லை அத்தியாவசியப் பொருட்கள் வாங்கிட முடியாது. அரசும் இவர்களைக் கண்டு கொள்ளவில்லை. வழக்கம் போல் ஆபத்து என்றால் முந்திச் செல்பவர்கள் ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் தான் என்பதை இம்முறையும் நிரூபித்து விட்டனர்.
புதுச்சேரி கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்கள் அடங்கிய புதுச்சேரி கோட்டத்திற்கான ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களின் பயிற்சி முகாம் ஆர்.எஸ்.எஸ்.பயிற்சி முகாம் அப்பகுதியில் நடைபெற்று வந்தது. இம்முகாம் டிசம்பர் 31 அன்று மாலைதான் முடிவடைவதாக திட்டமிடப்பட்டிருந்தது. புயல் நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதற்காக முகாம் முடிவடைய வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவே முடித்துவிட்டு தொண்டர்கள் நிவாரணப் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
நிவாரணப் பணியைத் துவங்கிய ஆர்.எஸ்.எஸ்.தொண்டர்கள், புயல் மழை சேதத்தினை அறிந்து கொள்ளப் புறப்பட்டனர். புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டங்களில் முற்றிலுமாக மின்சாரம் துண்டிக்கப்பட்டு எங்கும் இருள் சூழ்ந்து காணப்பட்டது. எனவே உடனடித் தேவையாக முழுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி, குடிநீர் உடனடித் தேவையென அறிந்து கொண்டு அவைகளை சேகரிக்கத் துவங்கினர்.

நிவாரணப் பணியாற்றிட சாலையில் வீழ்ந்து கிடந்த மரங்கள் மின்கம்பங்கள் போன்றவைகள் பெரும் இடையூறுகளாக இருப்பதை அறிந்து முதலில் அவைகளை அப்புறப்படுத்தத் துவங்கினர். குறிப்பாக புதுச்சேரியில் சாலைகளில் வீழ்ந்து கிடந்த மரங்களையும் மின்கம்பங்களையும் அகற்றி வாகனங்கள் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்தனர். இதன் காரணமாக புதுச்சேரி நகரில் சில பகுதிகளுக்கு மீண்டும் மின் இணைப்பு தறுவது சாத்தியமாயிற்று.
புதுச்சேரி நகரில் சுமார் 600 கும் மேற்பட்ட வீடுகளுக்கு ப்ரெட், பிஸ்கட் போன்ற உணவுப் பதார்த்தங்கள், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, கொசுவர்த்தி போன்றவைகளை வழங்கினர். மேலும் இதே போன்ற நிவாரணப் பணிகளை வில்லியனூர், திருக்கனூர். காலாப்பட்டு பஞ்சாயத்து ஒன்றிய கிராமங்களில் இருக்கின்ற சுமார் 1,000 குடும்பத்தின ருக்கு வழங்கினர்.
கடலூர் மாவட்டத்தில் வண்டிப் பாளையம் புதுப்பாளையம் பகுதிகளில் பாதிப்பிற்கு ஆளாகிய 1,200 குடும்பத்தினர்களுக்கு 3 கிலோ அரிசி , மெழுவர்த்தி, தீப்பெட்டி கொசுவர்த்தி வழங்கப்பட்டது.

கடலூரில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது
அப்பகுதியின் கவுன்சிலரும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுடன் இணைந்து நிவாரணப் பணியில் ஈடுபட்டார். அவரது உறவினர் ஒருவர் மறைந்து விட்டதையும் பற்றிக் கவலை கொள்ளாமல் தொண்டாற்றியத்தை அறிந்த. அவரது செயலை அப்பகுதி மக்கள் பாராட்டத் தயங்கவில்லை.
ஆர்.எஸ்.எஸ். தொண்டர்களுடன் நிவாரணப் பொருட்கள் வழங்கிட வந்த மற்றொரு கவுன்சிலர் “இந்த பொருட்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ். ஆள் வழங்கப்படுகிறது. வேறு எவரும் கொடுத்திடவில்லை” என்று அவராகவே எடுத்துரைத்தார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வீடு வீடாகச் சென்று நிவாரணப் பொருட்கள் வழங்கியதை மக்கள் பெரிதும் பாராட்டினர்.

புதுவைக் கோட்டச் செயலாளர் குரு சுப்பிரமணியன்
புதுவை கோட்டத் தலைவர் ஆடிட்டர் செல்வராஜ் மற்றும் கோட்டச் செயலாளர் குரு சுப்பிரமணியன் அவர்கள் தலைமையில் 50கும் மேற்பட்ட ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் வெள்ள நிவாரணப் பணியில் ஈடுபட்டனர். மேலும் நிவாரணப் பணியினைத் தொடர்ந்து வருகின்றனர்.

வடசென்னைப் பகுதியில் புயலால் பாதிக்கப்பட்ட 5 குப்பங்களைச் சார்ந்த மக்களுக்கு 2 நாட்களுக்கு உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன. அப்பகுதியில் நடைபெற்று வந்த ஆர்.எஸ்.எஸ். முகாமில் பங்கேற்று இருந்த தொண்டர்கள் இத்தொண்டுப் பணியில் ஈடுபட்டனர். பயிற்சி முகாமிற்கு வந்த தங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொண்டு செய்திட வாய்ப்பு கிடைத்ததை நினைத்து பெரு மகிழ்ச்சி அடைவதாக அவர்கள் தெரிவித்தனர்.