பெரும்பான்மை இருந்தால் எதையும் சாதித்திடலாம்

மண்டைக்காட்டில் பா.ஜ.க. வின் சாதனை 

கன்யாகுமரி மாவட்டத்தில் அரபிக் கடலோரத்தில் அமைந்துள்ள அருள்மிகு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இது பெண்களின் சபரிமலை என்று போற்றப்படும் புண்ய ஸ்தலமாகும்.

இங்கு ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 10  நாட்கள் திருவிழா நடக்கும். அதில் பல லட்சக்கணக்கான கேரளா, தமிழ்நாட்டு பக்தப் பெருமக்கள் கலந்து கொண்டு அம்மன் அருள் பெற்றுச் செல்வார்கள்.

திருவிழா வந்தால் கடற்கரை பகுதிகளில் திருவிழா சிறப்புக் கடைகள் அமைப்பதற்கான குத்தகையை ஆர்.சி.சர்ச்சை சேர்ந்தவர்கள் ஏலம் விட்டு லட்சக்கணக்கில் பணம் சேர்த்து பஞ்சாயத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தி செயல்பட்டனர். மேலும் ஒவ்வொரு ஆண்டும் திருவிழாவிற்கு முன்பு சமாதானக் கூட்டம் நடத்துவதாகக் கூறும் மாவட்ட ஆட்சியாளர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் அரசு அதிகாரிகள் கிறிஸ்தவர்களுக்கு ஆதரவாக முடிவுகள் எடுப்பதற்கு சமாதானக் கூட்டத்தை பயன்படுத்தியது வேதனைக்குரியது.

இந்து சமுதாயம் திடமாக முடிவு எடுத்தது. அதுதான் 2011 இல் நடந்த உள்ளாட்சி தேர்தல். நமது குறைகளை களைய மண்டைக்காடு பேரூராட்சியில் மக்கள் பிரதிநிதகள் வேண்டும் என்று முடிவெடுத்தது. நமது பாரதிய ஜனதா கட்சி சார்பில் அன்பு சகோதரி மகேஸ்வரி முருகேசனை வேட்பாளராக தேர்தலில் களம் இறக்கியது. மற்றும் 10 வார்டுகளிலும் போட்டியிட்டது. வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெற்றார்கள்.

இந்த வருடம் கொடைவிழா ௦04.03.2012 அன்று தொடங்கியது. கொடைவிழா ௦ தொடங்குவதற்கு முன்பே பேரூராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. குத்தகை வசூலிப்பது என்றால் பேரூராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் வசூலிக்க வேண்டும், இல்லையென்றால் எங்கும் வசூலிக்கக்கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு பஞ்சாயத்திற்கான ஏடி பேரூராட்சி தலைவிக்கு பதில் அனுப்பியிருந்தார்.

பஞ்சாயத்திற்கான கணக்கு தணிக்கை செய்யும் போது பஞ்சாயத்திற்கு நிதி இழப்பு ஏற்படின் செயல் அலுவலர், மன்ற தலைவர், மன்ற உறுப்பினர்களிடம் நகராட்சி சட்டம் (1920, 353) விதிகளின் படி பணம் வசூல் செய்யப்படும் என பதில் அனுப்பி யிருந்தார்.

திருவிழா ஆரம்பமான 2-ஆம் நாளன்று கோர்ட்டில் தடையுத்தரவு வாங்கப்பட்டது. அதையும் மீறி 4-ஆம் திருவிழா அன்று செயல் அலுவலர் தலைமையில் பஞ்சாயத்து ஊழியர்கள் 7 கடைகளில் 50  ரூபாய்க்கு ரசீது கொடுத்து ஆயிரம் ரூபாய் வசூலித்தனர். இதனை அறிந்த நமது பா.ஜ.க. துணைத் தலைவர் ஜெகன் சந்திரகுமார், தலைவி மகேஸ்வரி முருகேசன் மற்றும் 8 வார்டு உறுப்பினர்களும் தடுத்து நிறுத்தினர். பின்னர் பத்மனாபபுரம் ஆர்.டி.ஒ. தலைமையில் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது. இந்த ஒரு தடவையும் விட்டுக் கொடுங்கள், அடுத்த வருடம் பேசி தீர்மானிக்கலாம் என்று அவர்களிடம் கூறினார்.

நமது மன்ற உறுப்பினர்கள், தலைவர், துணைத்தலைவர், மாவட்டத் தலைவர் தர்மராஜ் மாவட்ட பொது செயலாளர் குமரி ப.ரமேஷ்,  வக்கீல் ரவிகுமார், இந்து முன்னணி மாவட்ட செயலாளர் மிசா சோமன் ஆகியோர் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவரும் ஒரே குரலில் முடியாது. குத்தகை பிரிக்கக் கூடாது. கடற்கரையில் பிரித்தால் மட்டுமே மற்ற பகுதிகளிலும் பிரிக்க வேண்டும் என்றனர். அடுத்து ஏ.எஸ்.பி. இதற்கு முன்னாள் 2001 முதல் 2006 வரை உங்கள் பாரதீய ஜனதா கட்சிதானே மண்டைக்காடு பேரூராட்சியை ஆண்டது. அப்போது என்ன செய்தீர்கள்? என்று கேட்டார்.

அப்போது நமக்கு தலைவர் மற்றும் மூன்று உறுப்பினர்கள் மட்டும் உண்டு என்றும் ஆகையால் தீர்மானங்கள் நிறைவேற்ற முடியவில்லை என்றும், இப்போது எங்களுக்கு தனிப் பெரும்பான்மை இருக்கிறது. நாங்கள் எங்களுக்கு வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும். எங்கள் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று உறுதிபட பதில் அளித்தனர். இதை அதிகாரிகளும் ஏற்றுக் கொண்டனர். 

இந்த வருடம் திருவிழா மிகச் சிறப்பாக நடைபெற்றது. உள்ளாட்சியில் மட்டுமல்ல பாரத தேசத்திலும் நம்மவர்கள் அதிக பட்ச இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டால் சிறுபான்மையினரை தாஜா செய்பவர்கள் தூக்கி எறியப்படுவார்கள். சமத்துவ சமுதாயம் உருவாக்கப்படும். நம்மவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் களையப்படும்.

டி ராஜரெத்தினம் மண்டைக்காட்டிலிருந்து.    

One comment

  1. sivakumar says:

    Great!!!!!!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *